ஆர்.கே.நகர் தொகுதியில், வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தேர்தல் களம் கன ஜோராய் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு ஏற்பு முடிந்து, கட்சிகள் பிரச்சாரம் ஆரம்பித்ததும் “சாணக்யன் குரல்” களத்தில் குதித்தது! நமது நிருபர்கள் மற்றும் பயிற்சி நிருபர்கள் கிட்டத்தட்ட 17 பேர் பல தரப்பட்ட சாமானிய வாக்காளர்களை சந்தித்து திரட்டிய தகவல்களை - உள்ளது உள்ளபடியே இங்கு தொகுத்து வழங்குகிறோம்!
எச்சரிக்கை: இது, கார்ப்பரேட் நி றுவனங்கள் என கூறிக்கொண்டு, அறிவியல் பூர்வ சர்வே, புவியியல் பூர்வ சர்வே, பதினெட்டாயிரம் பேரை சந்தித்தோம். கிழித்து விட்டோம், மாட்டி விட்டோம், என்றெல்லாம் பொய் சொல்லாமல் – சாதாரண, சாமானிய மக்களை சந்தித்து அவர்கள் சொன்னதை அப்படியே தொகுத்து இங்கே வழங்குகிறோம்! எங்களின் ஒரே பலம் - அரசியல் புரிதல், சாமான்ய மக்களை பற்றிய புரிதல் மற்றும் மனோ தத்துவ ரீதியான அணுகுமுறை மட்டுமே!
மற்றொரு எச்சரிக்கை: கடந்த 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து ஊடங்கங்களும் திமுக தான் வெற்றி பெறும் என அடித்து சத்தியம் செய்யாத குறையாக உள்நோக்கத்தோடு கூறிய போது, வெகு வெகு சில ஊடகங்களே (டைம்ஸ் நவ், சாணக்யன் குரல், தந்தி டிவி, குமுதம் ரிப்போர்ட்டர்) அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறியது - அந்த வெகு சிலவற்றில் “சாணக்யன் குரல்” கருத்து கணிப்பு முக்கியத்துவம் பெற்றது! இது எங்களை தொடர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கு ம், சக ஊடகங்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்!! “சாணக்யன் குரல்” டைம்ஸ் நவ் போலவோ, தந்தி டிவி போலவோ, குமுதம் குழுமம் போலவோ பிரபலமான ஊடகம் கிடையாது! ஆனால் உண்மையை, யார் சொன்னாலும் அது உண்மைதான், எப்போதும் அது உண்மைதான்!
மேலும் முழுமையான கருத்து கணிப்பை படிக்க...
No comments:
Post a Comment