Friday 24 April 2015
Saturday 18 April 2015
Wednesday 15 April 2015
ஜெயா டிவி "நடந்தது என்ன" நிகழ்ச்சி - 12 ஏப்ரல் 2015 - கருணாநிதியின் ராமானுஜ காவியம் - வீடியோ
ஜெயா டிவி "நடந்தது என்ன" நிகழ்ச்சி - 12 ஏப்ரல் 2015 - கருணாநிதியின் ராமானுஜ காவியம் - வீடியோ
தமிழ் புத்தாண்டு 2015-16 மன்மத வருட ராசி பலன்கள்
தமிழ் ஜோதிட தந்தை” வீரராகவ அய்யங்கார்
1955ல் பிறந்தவர்கள் இரண்டாவது முறையாக மன்மத
வருடத்தை வரப்போகிற சித்திரை மாதம் ஒன்றாம் தேதி - 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று
மீண்டும் சந்திக்க போகிறார்கள்! 60 வருடங்களாக பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காரண
பெயர் வைத்து அதற்கான பலன்களையும் ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிட சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.
இந்த சித்திரை தமிழ் புத்தாண்டு மிக சிறப்பான
ஒரு ஆண்டு. வளம் கொழிக்கும், வாழ்வு சிறக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டு, நல்ல
மழை பெய்யும், மக்களுக்கு மகிழ்ச்சி பெருகும். இவை பொதுவான பலன்கள். ஏழை எளியவர்களுக்கு
உணவளிப்பது, நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது, பைரவருக்கு (நாய்களுக்கு)
பசி ஆற்றுவது, கோவில் திருப்பணிகளுக்கு மற்றும் அன்னதானங்களுக்கு நம்மால் முடிந்த அளவு
உதவுவது, எதிலும் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது போன்ற விஷயங்கள் அனைத்து ராசி
அன்பர்களுக்கும் நல்ல பலன்களை ஏற்படுத்தும். நல்லதே நடக்கும். எமது பரிபூர்ண ஆசிகள்.
தமிழ் புத்தாண்டு 2015-16 மன்மத வருட ராசி பலன்கள்/ அடுத்த இதழில்...விரைவில்...
ரகசிய கேமரா - இது கோவா கோல்மால்!
ரகசிய கேமரா - இது கோவா கோல்மால்!
கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய
மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா
ரெடிமேட் கடையில் சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை தனது உடலுக்கு பொருத்தமாக
உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையினுள் இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார்.
அப்போது, வெளியே காத்திருந்த மந்திரியின் உதவியாளர், உடை மாற்றும் அறையை குறிவைத்தபடி
ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, மந்திரி ஸ்மிரிதி
இராணிக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்து எச்சரித்தார்.
“அக்ரி அரஸ்ட்” - அரண்டு போன அதிமுக தலைகள்
“அக்ரி
அரஸ்ட்”
- அரண்டு போன அதிமுக தலைகள்
தவறு செய்தால் தண்டனை என்பது மற்ற கட்சிகளில் எப்படியோ, அ தி மு க வில்
கண்டிப்பாக உண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் முன்னாள் அமைச்சர் அக்ரி கிரிஷ்ணமுர்த்தியின்
அரெஸ்ட். இந்த வழக்கு சி பி சி ஐ டி வசம் ஒப்படைக்க படும்போதே அ தி மு க தலைமை தெளிவான
சில உத்தரவுகளையும் வழங்கியது. நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும். தவறு செய்தது உறுதி
செய்யப்பட்டால், யாராக இருந்தாலும் பிடித்து உள்ளே போடுங்கள் என்பதே அது. இந்த வழக்கை
விசாரித்து வரும் அதிகாரிகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வழக்கில்
யாராவது அழுத்தம் கொடுத்தால் அதை உடனே மேலிடத்துக்கு தெரிய படுத்த சொல்லியதுதான், என்கின்றனர்
நமக்கு தெரிந்த காக்கி வட்டாரங்கள். அக்ரிக்கு நெருக்கமான சிலர் கூட மேற்படி தகவலால்
அலெர்ட் ஆகி அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர் என போகிறது கதை.
“காலம் செய்யும் கோலம்” பா.ஜ.க.வில் இருந்து ஓரம் கட்டப்படும் அத்வானி
“காலம் செய்யும் கோலம்”
பா.ஜ.க.வில் இருந்து ஓரம் கட்டப்படும்
அத்வானி
இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதீய ஜனதா கட்சி இவரை மே 2009-ல் நடைபெற்ற இந்திய பொதுத்
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்தது. வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த
பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு
உயர்ந்தது.
Friday 3 April 2015
சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்
சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்
& அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல்
டிப்ஸ்!
“தமிழ் ஜோதிட தந்தை” வீரராகவ அய்யங்கார்
ஒரு சூரியன்
ஆயிரம் கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனி பகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும்
அவற்றின் செயல்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும்
இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார். அதனாலேயே சனி பெயர்ச்சி
என்றாலே பலருக்கும் ஒரு கிலி. அது தேவை இல்லாதது என்பதே ஜோதிட உண்மை.
ஜய வருடம்
மார்கழி மாதம் 1-ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய
காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம்,
பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச
பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 44 நிமிடத்திற்கு சனிப்பெயர்ச்சி
நிகழ் பெற்றது.
இப்போது
சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு
16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்திக்
கொண்டு இருக்கிறார்.
சனீஸ்வரரை
பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. உண்மையில் அவர் தரும் தொல்லைகளை விட நன்மைகள் அதிகம்.
கீழ் குறிப்பிட்டுள்ள சனி காயத்ரி ஸ்லோகத்தை தினமும் உச்சரிப்பதின் மூலம் அனைத்து நன்மைகளையும்
உங்களுக்கு சனீஸ்வரர் வழங்குவார். இந்த சனி பெயர்ச்சி மூலம் சனீஸ்வரர் நம்மிடம் எதிர்பார்ப்பது,
கடவுளின் குழந்தைகளான விலங்கு மற்றும், பறவைகளுக்கு (அதாவது நாய், பூனை, மாடு, காகம், குருவி போன்ற
ஜீவராசிகள்) உணவளிப்பது, ஏழை, எளியவர்களுக்கு உதவுவது, நல்ல மனதுடன், யாருக்கும் கெடுதல்
நினைக்காமல் இருப்பது என்பதே. இதை செய்தால் சனீச்வர பகவானின் பூரண ஆசியை பெற்று உங்களுக்கு
நல்லது நடக்க போவதை நீங்களே கண்கூடாக பார்க்க போகிறீர்கள் என்பதே ஜோதிட உண்மை.
சனீச்வர காயத்ரி
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்”
தன்னோ மந்த ப்ரசோதயாத்”
இனி ஒவ்வொரு
ராசியில் பிறந்தவர்களின் சனி பெயர்ச்சி மற்றும் 2015 ஆண்டு பலன்களை பார்ப்போமா!
Subscribe to:
Posts (Atom)