தமிழ் ஜோதிட தந்தை” வீரராகவ அய்யங்கார்
1955ல் பிறந்தவர்கள் இரண்டாவது முறையாக மன்மத
வருடத்தை வரப்போகிற சித்திரை மாதம் ஒன்றாம் தேதி - 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று
மீண்டும் சந்திக்க போகிறார்கள்! 60 வருடங்களாக பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காரண
பெயர் வைத்து அதற்கான பலன்களையும் ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிட சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.
இந்த சித்திரை தமிழ் புத்தாண்டு மிக சிறப்பான
ஒரு ஆண்டு. வளம் கொழிக்கும், வாழ்வு சிறக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டு, நல்ல
மழை பெய்யும், மக்களுக்கு மகிழ்ச்சி பெருகும். இவை பொதுவான பலன்கள். ஏழை எளியவர்களுக்கு
உணவளிப்பது, நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது, பைரவருக்கு (நாய்களுக்கு)
பசி ஆற்றுவது, கோவில் திருப்பணிகளுக்கு மற்றும் அன்னதானங்களுக்கு நம்மால் முடிந்த அளவு
உதவுவது, எதிலும் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது போன்ற விஷயங்கள் அனைத்து ராசி
அன்பர்களுக்கும் நல்ல பலன்களை ஏற்படுத்தும். நல்லதே நடக்கும். எமது பரிபூர்ண ஆசிகள்.
தமிழ் புத்தாண்டு 2015-16 மன்மத வருட ராசி பலன்கள்/ அடுத்த இதழில்...விரைவில்...
No comments:
Post a Comment